எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 92 சதவீதம் அளவுக்கு மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட், பயணிகள் ரெயில்கள் மற்றும் மெமு சேவைகளும் செயல்படுகின்றன. இவற்றுடன் 472 ராஜ்தானி மற்றும் 282 வந்தே பாரத் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பாதி ரெயில்கள் உத்தர பிரதேசத்தில் இருந்தும், 11 சதவீதம் டெல்லியில் இருந்தும், 10 சதவீதம் பீகாரில் இருந்தும், 3 முதல் 6 சதவீதம் மராட்டியம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
இந்த ஒன்றரை மாத காலத்தில் 12 முதல் 15 கோடி பக்தர்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். தொடக்கத்தில் இருந்து இதுவரை 13,667 ரெயில்கள் பிரயாக்ராஜ் மற்றும் அதனருகேயுள்ள ரெயில் நிலையங்களை வந்தடைந்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


