எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று நாடு திரும்பினர்.
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜூலை 1, 2024 நிலவரப்படி, 209 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 51 மீனவர்கள் 2021 முதலிலும், 130 மீனவர்கள் 2022 முதலிலும், 9 மீனவர்கள் 2023 முதலிலும், 19 மீனவர்கள் 2024 முதலிலும் சிறையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் வந்தடைந்தனர்.
தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் நேற்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அண்டை நாட்டு சிறைகளில் இன்னும் வாடும் பல இந்திய மீனவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு விடுதலையடைந்த மீனவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். விடுவிக்கப்பட்ட 22 மீனவர்களில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், மூன்று பேர் அண்டை யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூவை சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


