எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்காட் : மகாராஷ்டிரம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்த கில் இருந்த 18 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ் கானுக்குச் சொந்தமான மீன்பிடி படகு ஒன்று நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததும், இந்தியக் கடலோர காவல்படை, இந்தியக் கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகிலிருந்த அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக அப்பகுதியில் உள்ள மற்றொரு படகில் இறக்கிவிடப்பட்டது. படகிலிருந்து 18 மீன்பிடி மீனவர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதை ராய்காட் எஸ்பி உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின்போது, அந்த வழியாக சென்ற இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் மும்பையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. தீப்பிடித்த சம்பவத்தை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் கண்டதாக தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


