எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 150 வருட பழமையான இந்த மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிகளும் உள்ளன. அதில் ஒரு பள்ளியான ஏ.பி.கே. யூனியன் பள்ளியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதியம் ப்ளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சகமாணவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து அலிகர் சிவில்லைன் காவல்நிலையத்தின் ஆய்வாளர் அபய் பாண்டே கூறுகையில், “அலிகர் பல்கலைக்கழகத்தின் ஏ.பி.கே.யூனியன் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சிலர் இரண்டு குழுக்களாகி மோதிக் கொண்டனர். இதில் துப்பாக்கியுடன் இருந்த ஒரு மாணவர் பிளஸ் 1 பயிலும் முகம்மது கைப் என்ற மாணவனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் காயமடைந்த கைப்பை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் அவரது உயிர் பிரிந்தது.” எனத் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவன் முகம்மது கைப்பின் தந்தை முகம்மது நையீம், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்ட மாணவர்களைப் பிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து சிசிடிவி காட்சிகளையும் பெற்று நடவடிக்கை தொடரப்பட உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


