எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இ.பி.எஸ்., “கூட்டணி பற்றிய பேச்செல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் எதாவது கூறினோமோ! யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?” என்றார்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “அ.தி.மு.க. , திமுகவை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது.
தி.மு.க. வை வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள். கூட்டணி குறித்து 6 மாதங்கள் கழித்து தெரிவிக்கப்படும். ” என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் பதில் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


