Idhayam Matrimony

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய 2 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2025      இந்தியா
Mathu 2023 04 15

Source: provided

சத்தீஸ்கர் : சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் உள்ள பத்லி கிராமத்தில் வியாழக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேருக்கு வாயில் இருந்து நுரை வரத் தொடங்கியது. இருவரும் ஆரம்பத்தில் நவாகர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், அவர்களின் நிலை மோசமடைந்ததால், உடனடியாக ஜஞ்ச்கீர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ராம் கோபால் என்ற நபர் சீதா ராம் மற்றும் ரோஹித் இருவருக்கும் மதுபானத்தை வழங்கி உள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலியானோரின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன. உடற்கூராய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கச் சந்திரா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து