Idhayam Matrimony

மார்ச் 14 முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      தமிழகம்
vijay 2025-01-17

 சென்னை, மத்திய அரசு அளித்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பை த.வெ.க., தலைவர் விஜய் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 14ம் தேதி முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை துவக்கி உள்ளார். அவருக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, 'ஒய்', 'இசட்' பாதுகாப்பை வழங்கும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டு இருந்தது. இதன் மூலம், 8 முதுல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிகிறது.ஆனால், இந்த பாதுகாப்பை விஜய் ஏற்றாரா? எப்போது முதல் பாதுகாப்பு அளிக்கப்படும்? என தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ' ஒய்' பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும், வரும் 14ம் தேதி முதல் அவரது பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து