எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மங்களூரு : கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டில்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பெரியளவில் விநியோகம் செய்ய தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் அவர்களிடம் இருந்து ரூ.375 கோடி மதிப்புள்ள 37.870 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 2,18,460 பணம் , 4 மொபைல் போன்கள், 2 பயணப் பைகள், 2 பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அடோனிஸ் ஜபுலைல் (31), அபிகேல் அடோனிஸ் (30) ஆகிய இருவரும் டில்லியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவத்தில் முதன்முதலாக மங்களூர் பகுதியில் 15 கிராம் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மங்களூர் கிழக்கு காவல்துறையினர் ஹைதர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் இகேடி பெலோன்வு என்பவர் கைது செய்யப்பட்டு 6.248 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து விசாரித்தபோது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க பெண்கள் குறித்து தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 14 அன்று இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


