எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. , காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம் குறுக்கிட்டபோது, “உங்கள் பேரக்குழந்தையும், இங்குள்ள பலரின் குழந்தைகளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்'' என்றார். அதற்கு “புதிய கல்விக் கொள்கை வேறு - சி.பி.எஸ்.இ. கொள்கை வேறு” என்று தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் பதில் தந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "புதியக் கல்விக் கொள்கை மத்திய அரசு சட்டமா? 2028-க்கு பிறகு இதை கட்டாயமாக்கி விடுவீர்கள். மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள்" என்றார். அப்போது மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மைக்குகளின் இணைப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பேரவைத் தலைவர் செல்வம், ''சி.பி.எஸ்.இ. பாடத்தை புதுச்சேரியில் அமல்படுத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ''புதிய கல்விக் கொள்கையை நீங்கள்தான் அமல்படுத்தியுள்ளீர்கள். மாணவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்'' என்றார். அதையடுத்து தி.மு.க. , காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


