எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நிதிபதியான ஜாய்மல்யா பாக்சி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த விழாவில், மற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி ஜாய்மல்யாவுக்கு இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதி ஜாய்மல்யா பதவியேற்றதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 33 நீதிபதிகள் இருப்பார்கள்.
நீதிபதி ஜாய்மல்யா சுப்ரீம் கோர்ட்டில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகிப்பார், அந்த காலத்தில் அவர் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றுவார். 1966 அக்டோபரில் பிறந்த நீதிபதி ஜாய்மல்யா, 2031 மே 25ல் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஓய்வு பெற்றவுடன் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொள்வார். அவரது பதவிக்காலம் அக்டோபர் 2, 2031 அன்று ஓய்வு பெறும் வரை நீடிக்கும்.
மார்ச் 6 அன்று தலைமை நீதிபதி கண்ணா தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம் அவரது பெயரைப் பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு, மார்ச் 10ல் மத்திய அரசு நீதிபதி ஜாய்மல்யா பாக்சியின் பெயர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி அபய் எஸ். ஓகா மற்றும் நீதிபதி விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம், ஜூலை 18, 2013 அன்று நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்றதிலிருந்து எந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும் தலைமை நீதிபதியாக உயர்த்தப்படவில்லை.
நீதிபதி பாக்சி ஜூன் 27, 2011 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜனவரி 4, 2021 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவர் 2021 நவம்பர் 8ல் மீண்டும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார், அன்றிலிருந்து அங்கேயே பணியாற்றி வருகிறார். 13 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர், தலைமை நீதிபதிகள் உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒருங்கிணைந்த அகில இந்திய மூத்த நீதிபதிகளில் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். தனது நீண்ட பணிக்காலத்தில், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி பல்வேறு சட்டத் துறைகளில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


