எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆதரவு: சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ செங்கோட்டையனும் எழுந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்பாவு வெளியேறினார்...
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தெடர்ந்து, அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார். இதையடுத்து, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
இ.பி.எஸ். குற்றச்சாட்டு:
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், “திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தீர்மானம் தோல்வி:
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
டிவிஷன் முறை எண்ணிக்கை...
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பு ஆகும். சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி சட்டப்பேரவை செயலர் முன்நின்று இந்த டிவிஷன் வாக்கெடுப்பை நடத்தினார். டிவிஷன் முறையிலும் சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவளித்திருந்த நிலையில், 154 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இனி தொடர்ந்து அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் : 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Apr 2025சென்னை : ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும்.
-
அடுத்த தொடரில் காணாமலும் போகலாம்: சூர்யவன்ஷி குறித்து சேவாக்
25 Apr 2025புதுடெல்லி : சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
25 Apr 2025காஞ்சி : காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
என் நேர்மை கேள்விக்குள்ளாவது வருத்தம் அளிக்கிறது: நீரஜ் சோப்ரா
25 Apr 2025புதுடெல்லி : எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
-
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
25 Apr 2025வாடிகன் சிட்டி : புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு
25 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஆதார்கள் சேவை மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்
25 Apr 2025சென்னை : ஆதார்கள் சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக 50 மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
-
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு
25 Apr 2025சென்னை : பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார்: ஹேசில்வுட் குறித்து ரவி சாஸ்திரி கணிப்பு
25 Apr 2025மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க டெல்லி கோர்ட் மறுப்பு
25 Apr 2025புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க டில்லி நீதிமன்றம் மறுத்துவ
-
400-வது டி20 போட்டியில் தோனி
25 Apr 2025இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
-
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
25 Apr 2025சென்னை : அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
-
கோகுல இந்திராவின் கணவர் காலமானார்: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
25 Apr 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
-
3,935 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு
25 Apr 2025சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்: ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ திடீர கடிதம்
25 Apr 2025மும்பை, : ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
சொந்த மைதானத்தில் ஆர்.சி.பி. முதல் வெற்றி
25 Apr 2025பெங்களூரு : விராட் கோலி, ஹேசில்வுட் அபார ஆட்டத்தால் 11 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்.சி.பி.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
கோவை உலக புத்தொழில் மாநாட்டுக்கான இலச்சினை, சிறப்பு இணையதளத்தை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
26 Apr 2025சென்னை, கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு - 2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதல்வர் உதயநி
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து