எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையினால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஏ.வில் உள்ள மருத்துவர்கள் விக்கெட் கீப்பிங்கில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு சிறிது ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளார்கள். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி பேட்டராக மட்டுமே சாம்சன் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
23 வயதாகும் ரியான் பராக் தற்போது இளம் கேப்டனாக இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 22 வயதில் ஆர்.சி.பி. அணியை தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் ரியான் பராக் அரைசதம் அடித்துள்ளார். பேட்டிங், பீல்டுங்கில் அசத்தும் பராக் பந்துவீசுவதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ல் எதிர்கொள்ளவிருக்கிறது.
சஹால் - தனஸ்ரீ விவாகரத்து
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன.
இந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக அவரது வழக்கை முடித்து வைக்க அவரது வழக்குரைஞரும் கோரிக்கை வைத்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டார். இதனால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புகழ் பரப்பும் ப்ராவோ
கௌதம் கம்பீருக்குப் பதிலாக கே.கே.ஆர். அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப்ரோவோ பேசியதாவது: கே.கே.ஆர். அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன். என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும். கே.கே.ஆர். அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கே.கே.ஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கே.கே.ஆர். அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும் என்றார்.
பேட்மிண்டன்: ரஜாவத் வெற்றி
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரியான்ஷு ரஜாவத், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.
வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டு
கே.கே.ஆர். அணியில் 2020-ல் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கும் தேர்வானார். கே.கே.ஆர். அணி கடந்தாண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருந்தார்கள். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் சுனில் நரைன் பேசியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் எங்களை நிரூபித்து வருகிறோம். நாங்கள் கூட்டாக நன்றாக பந்து வீசுகிறோம். வருண் சக்கரவர்த்தி எங்கள் பக்கம் இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை, அழுத்தத்தை வருண் எப்போதும் தொடர்ச்சியாக செய்கிறார். கே.கே.ஆர். அணி தனது முதல் போட்டியில் ஆர்.சி.பி.யை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது. 71 ஐ.பி.எல். போட்டிகளில் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.56ஆக இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
இஸ்லாமிய கோர்டுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
29 Apr 2025புதுடெல்லி, இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை.
-
இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எதிர்பார்ப்பு
29 Apr 2025இஸ்லாமாபாத், இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார
-
அமைதியை மீட்டெடுக்க இந்தியாவுடன் ராஜீய ரீதியில் முயற்சி: நவாஸ் ஷெரீப்
29 Apr 2025லாகூா் : இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ்
-
சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்கு 'புதிய ஆப்'
29 Apr 2025சென்னை : சென்னையில் பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் காவல் ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப்’ என்ற பெயரில் நவீன பாதுகாப்பு சாதனம் அறிமுகம
-
பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்
29 Apr 2025அன்காரா : பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை என்று துருக்கி நாடு தெரிவித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-04-2025
29 Apr 2025 -
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்க
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 5-ம் கட்ட கலந்தாய்வு மே 5-ல் நடைபெறும் என அறிவிப்பு
29 Apr 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் முக்கிய குற்றவாளி மூசா பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்: அதிர்ச்சி தகவல் வெளியீடு
29 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று  
-
கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழு கூடுகிறது
29 Apr 2025ரோம் : புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ம் தேதி தொடங்கவுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை
29 Apr 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
-
பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை
29 Apr 2025சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி
29 Apr 2025கனடா : கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் தலைவர் தோல்வி அடைந்தார்.
-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு கார்கே கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
-
சுமோ திரை விமர்சனம்
29 Apr 2025அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு
29 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம்
-
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
29 Apr 2025நெல்லை : நெல்லையில் பல்வேறு பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், நெல்லை டவுனில் பிரபல காஜா பீடி நிறுவனம் உள்ளது.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா
29 Apr 2025மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப். 29) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
-
ஜூன் மாதத்திற்குள் 4 மண்டல மாநாடுகள்: த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
29 Apr 2025புதுடில்லி : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
-
பஹல்காம் சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது: நடிகர் அஜித் கண்டனம்
29 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன் என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
-
இ. க. கட்சியின் கேரள மாநில செயலாளர் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு
29 Apr 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார்.
-
பாரதிதாசன் வரிகளை நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்: முதல்வர்
29 Apr 2025சென்னை, பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை
29 Apr 2025சென்னை, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.