எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஓசூர் : கன்னட அமைப்பினர் போராட்டம் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மராட்டிய மொழி பேசவில்லை எனக் கூறி கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநரை அங்குள்ள மராட்டிய அமைப்பினர் தாக்கினர். இதை கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் முழு அடைப்பு நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனினும் தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று காலை கன்னட அமைப்பினர் சார்பில் தமிழ்நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், காவிரி ஆறு தங்களது என கூறி முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக எல்லையை நோக்கி வர முயன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை அம் மாநில போலீஸார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனினும் பாதுகாப்பு காரணங்கள் கருதி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக மாநில எல்லைப் பகுதியான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தமிழக போலீஸாரும் கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


