எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : கேரளாவில் வீட்டின் வெளியே நின்ற காரில் அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் அருகே உள்ள பட்டித்தானம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 42). இவர் ஏட்டுமானூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கணேஷ்குமார் கண்ணூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எனவே இவருக்கு வழியனுப்பு விழா நடத்த சக நண்பர்கள், போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து கணேஷ்குமார் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பலமுறை அவரது செல்போனுக்கு அழைத்தும், செல்போனை எடுக்கவில்லை. இதனால் சிலர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே நின்ற காரில் கணேஷ்குமார் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஏட்டுமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சப்-இன்ஸ்பெக்டர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


