எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்று கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
எந்த திட்டமும் இல்லாமல் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடந்ததாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "சொந்த மாநிலம் மீது அண்ணாமலைக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க.வுக்கே விசுவாசம் காட்டுகிறார். நேற்றைய கூட்டம் குறித்து அண்ணாமலை பேசுவது முக்கியமல்ல பிரதமர், உள்துறை மந்திரியின் கருத்தே முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் கட்சிக்கு வேலை மட்டுமே செய்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும்" என்று கூறினார்.
இதனையடுத்து மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றம் குறித்து பேசலாம்" என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


