எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி டி.ஐ.ஜி. பா.மூர்த்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. அபிநவ் குமார், மதுரை டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டி.ஐ.ஜி. பா.மூர்த்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி டி.ஐ.ஜி.-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் ஆர்.சக்திவேல் உளவுத்துறை- பிரிவு -1 இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் வி.பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையர் மேகலினா இடென் சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இணை ஆணையர் டி.என்.ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி. வி.கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு எஸ்.பி. ஜி.ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு சரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


