எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த கூட்டணியில் அ.தி.மு.க. 66, பா.ம.க. 5, பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களே தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது" என்று முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க.வோ பா.ம.க., த.மா.கா., ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அணிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கிய தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இவை இரண்டும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அப்போதே பேசப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வை இணைக்கும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதற்கான வித்தியாசம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும் தெரிய தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், "இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்றார். தற்போது, எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான்" என்கிறார்.
இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தேர்தல் நெருங்கும் சமயத்தில் உறுதியாகி விடும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை சட்டசபை கூட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். பொதுவாக, இதுபோன்று அவர் டெல்லி சென்றால் முன்கூட்டியே அவரது பயண விவரம் தெரிய வரும். ஆனால், நேற்றைய பயணம் ரகசியம் காக்கப்பட்டது. கடைசி நேரத்திலேயே தெரிய வந்தது.
அவர் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரை சந்திக்க இருக்கிறார்? என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "கடந்த மாதம் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று மட்டும் கூறிவிட்டு அவசர அவசரமாக சென்று விட்டார்.
வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார். இதனால், டெல்லியில் ஏதோ நடக்கிறது?" என்பது மட்டும் தெரிகிறது. அதன் விளைவாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலருமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
15 Oct 2025கரூர் : சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய