எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, திருப்பூரில் 1 லட்சம் டன் திடக்கழிவுகள் கொட்டி கிடப்பதாக தகவல் வருகிறது. எனவே அவற்றை அகற்ற அரசு வழிமுறைகளை செய்யுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான குப்பைகளை கோவையில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் இருந்தும் கொண்டு செல்ல வேண்டும். கோவையில் தொடங்கும்போது திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுகளை கொட்ட நிரந்தரமாக இடம் தேர்வு செய்து தர அரசு முன்வருமா என்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே அங்கு 4 ஏக்கரில் குப்பை கொட்டும் இடத்தில் பயோ மைனிங் முறையில் குப்பை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்டும் வகையில் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


