எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.;
சென்னை அடையார் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் காலைப்பொழுது சோதனையாக அமைந்தது. இந்த போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
இந்தநிலையில் சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையன் தப்பி சென்ற ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிறுத்தப்பட்டது. தப்பி சென்ற 3-வது கொள்ளையனான சல்மானை ஓங்கோல் பகுதியில் வைத்து ஆந்திர ரெயில்வே போலீசார் கைது செய்து சென்னை போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பலியான ஜாபர் குலாம் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் குலாம் பயன்படுத்திய டூவீலர், கைத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்டர் நடைபெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


