எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே இடம்பெறும். தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியிருப்பதாவது:- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிபெயர்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மும்மொழிக்கொள்கை மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கும் சூழலில், தற்போது மத்திய அரசு சார்பில் இந்திமொழியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


