எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் பலியானதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் செய்தி தொடர்பாளர் பஸெம் நயிம் தெரிவித்துள்ளார். இதேபோல், காஸா பகுதியின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர் பலியானதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்து இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் படையிடம் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கப்படவில்லை என்றால் இந்தத் தாக்குதலானது மேலும் அதிகரிக்கக் கூடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும், ஹமாஸ் தரப்பில் தங்களிடம் மீதமுள்ள 59 பிணைக் கைதிகள் இஸ்ரேல் படைகள் காஸாவை விட்டு வெளியேறி போர் நிறுத்தம் நீடித்தால் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் 24 பேர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


