எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, நாட்டில் உள்ள வங்கிக ளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள் முடிவடைந்ததை யொட்டி அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை விடப்பட்டது.
ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14 ஆம் தமிழ் புத்தாண்டு, 18 ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாள்களும் விடுமுறை நாள்களாகும். அதேபோல், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது. வங்கிகளுக்கான விடுமுறை இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்.பி.ஐ.) தீர்மானிக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள பல வங்கிகள் ஆண்டு விடுமுறை நாள்களைக் கடைப்பிடிக்கின்றன, அவற்றில் தேசிய விடுமுறை நாள்கள், மாநிலங்களில் குறிப்பிட்ட பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் ஆகியவை அடங்கும். அதன்படி, அன்றைய நாள்களில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் செயல்படாது. இதனால், பணப் பரிவர்த்தனைகள், காசோலை மற்றும் வரைவோலை பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ள இயலாது.
அதேவேளையில், இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி கணக்குகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது என வங்கிகள் தெரிவித்துள்ளன. அதேபோன்று, பணம் செலுத்தும் இயந்திரங்கள் வாயிலாக டெபாசிட் செய்வதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று கூறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


