எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
நவநிர்மாண் சேனா கட்சியினர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தானே மற்றும் புனே மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று மேலாளரிடம் மராத்தி மொழியில் பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
மேலும் ஊழியர் ஒருவரையும் தாக்கினர். அதேபோல தனியார் வங்கி ஒன்றில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். இவர்கள் நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது, "மராத்தி மொழியை பயன்படுத்த வலியுறுத்துவது தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், அது பொறுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அத்துமீறி நடந்துகொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


