எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3 ,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.
கோடைக் காலம் தொடங்கி உள்ளதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ம் தேதியன்று 19 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவாகும். மின்தேவை அதிகரிப்புக்கு ஏற்ப மின்னுற்பத்தியும், மின்கொள்முதலும் இருந்ததால், மின்பற்றாக்குறை ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தினசரி மின் தேவை 3,500 மெகாவாட் குறைந்து 15,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதற்கிடையே, வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் தினசரி மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என மின்வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


