எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று (ஏப்.10) தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
இந்நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார். கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர குடிநீர் விநியோகிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மின்தடை ஏற்படாது,” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


