எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா, பீகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில் மட்டும் 22 பேர் பலியுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாட்னா, போஜ்பூர், ஷிவான் மற்றும் கயாவில் தலா நான்கு பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் தலா மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
இடியுடன் கூடிய மழைக்கு 21 பேரும், மின்னல் தாக்கியதில் ஒருவரும் பலியானதாக நாளந்தா மாவட்ட ஆட்சியர் சஷாங்க் பூபங்கர் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். உடற்கூராய்வுக்குப் பிறகு உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்மா கிராமத்தில் வியாழக்கிழமை ஒரு கோயில் மீது மரம் விழுந்ததில் 6 பேர் பலியாகினர். மழையின் போது பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பலியாகினர். இதனிடையே மழைக்கு பலியானோரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


