எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த ஆண்டு நடந்த விருந்து நிகழ்ச்சியில் 2 சிறுமிகளுக்கு மதபோதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அவரைத் தேடி வந்தனர். மேலும் அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கேரள மாநிலம், மூணாறில் பதுங்கியிருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை கோவை அழைத்து வந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஏப்.25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


