எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மகளிரணியினர் முழக்கம் எழுப்பினர்.
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதாவது, தி.மு.க.வில் அவர் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் இன்னும் தொடர்கிறார். இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சரோஜா உள்பட அ.தி.மு.க. மகளிரணியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர்.
அமைச்சர் பொன் முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


