எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு வியாழக்கிழமை மாலை இமெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை காலை குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 12 ஆவது முறையாக வெடிகுண்டு தொடர்பாக மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மர்ம நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் நிலையில்,சில நாள்களுக்கு முன்பாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டை அறை 100-க்கு தொடர்கொண்டு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதும், அவர் தனது தந்தையின் செல்போன் மூலம் பேசியது விசாரணையில் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


