எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வரமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கே: பா.ம.க. உங்கள் கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்று பேசப்படுகிறதே? அதனால் தான் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவருவது உண்மையா?
பதில்: நீங்களே முணு முணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
கே: பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து உங்கள் பதில் என்ன? இந்த கூட்டணி உங்களுக்கு எதிரான வலிமையான கூட்டணி என நினைக்கிறீர்களா?
பதில்: இது தி.மு.க. அணி யால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல, இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக் கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
கே: நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறீர்கள் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்?
வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது.
நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று, அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ் நாட்டைப் பார்த்து-தி.மு.க.வைப் பார்த்து, பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
கே: உங்கள் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியின் சில அம்சங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை பற்றி விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.
கே: மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதில் இருந்து எப்படி மீள்வீர்கள்?
பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழலை நாங்கள் முன்னேற்றியுள்ளோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
கே: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தெரிகிறது. உங்கள் பதில்?
பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்கு உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.
அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு-போதைப் பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது எனத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்பு டையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் நார்க்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
கே: ஜனவரியில், சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளை புரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து இருக்கிறீர்கள். இது திராவிட-ஆரியப் போராட்டத்தின் நீட்சியா?
பதில்: 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல். அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல.
ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கி றேன்.
கே: துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?
பதில்: துணை முதல்-அமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.
கே: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்ததை ஒரு எதேச்சதிகார செயல் என்றும் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாசம் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். ஆனால் நீட் செயல்படுத்தப்பட்டபோது தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததே?
பதில்: தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே "நீட் தேர்வு செல்லாது" என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிவந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான் திரும்ப பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் தங்களை அடகுவைத்துவிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக-பா.ஜ.க. விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை
03 Nov 2025மும்பை: உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


