எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீநகர் : விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். இரண்டாவதாக சாலைகளின் இணைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்பன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளையும், மீட்பு பணிகளையும் நேற்றும் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்ற போது மக்கள் அவரின் வாகனத்தை மறித்து தங்களின் துயரங்களை தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, இது மூன்றாவது நாள். இந்த மூன்று நாட்களாக மூத்த அமைச்சர்கள் தினமும் இங்கே வந்துள்ளனர். நேற்றுமுன்தினம் நான் கால்நடையாக சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். முடிந்த வரையில் வேகமாக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். மக்களை நாங்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். எங்களின் இரண்டாவது முன்னுரிமை சாலைகளை இணைப்பது. சாலைகளை மீட்டெடுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இன்னும் 24 மணிநேரத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், இடிபாடுகள் அகற்றப்படும். நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு பின்பு, பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு, எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் விதிமுறைகளின் படி இழப்பீடுகள் வழங்கப்படும். தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார். இதனிடையே ராம்பன் நிலச்சரிவு பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல பாதகமான சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் நிர்வாகம் அனைத்து சிறப்பான விஷயங்களையும் செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பஷீர் சவுதரி பாதிப்பு நேர்ந்த இடத்தில் முகாமிட்டுள்ளார்.
மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. நீர் விநியோகத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 98 நீர் வழங்கள் திட்டத்தில் 89 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 9 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை இன்றுக்குள் பாதியளவு மீட்டெடுக்கப்படும். மேலும் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் சேர்ந்து முடிவெடுக்க ராம்பனுக்கு செல்ல நான் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. செரி பக்னா கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நஷ்ரி, பனிஹால் இடையே ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


