எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.ஆனாலும், ஈஸ்டர் தினத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்று மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல்முறையாக உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்துள்ளது. அதேவேளை, புதினின் இந்த அறிவிப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |