எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தின் முடிவில் எந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனை தீர்த்து வைக்க தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் வரையறுத்த 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவதை கண்காணிப்பது இதன் பொறுப்பு. அத்துடன், இரு மாநிலங்களுக்கு இடையிலான மழைப் பொழிவு, அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து தண்ணீர் பங்கீடு தொடர்பாக இந்த அமைப்புகள் உத்தரவு பிறப்பிக்கின்றன.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே தண்ணீர் திறப்பில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த அளவை விட அதிகமாகவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த பல மாதங்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 107.59 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்தும் காவிரி ஆற்றில் 2034 கன அடியாக உள்ளது. அணையில் 75.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் சுமார் 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 39வது கூட்டம் நேற்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் தண்ணீர் இருப்பு, தேவை உள்ளிட்டவை குறித்து இரு மாநிலங்களிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. முடிவில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


