எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடர்...
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சாய் சுதர்சன்...
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் (விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி, ஐ.பி.எல்.) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 6 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாய் சுதர்சன் (அறிமுக வீரராக), ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மே மாதம் அறிவிப்பு...
இதில் சாய் சுதர்சனை தவிர்த்து மற்ற 5 வீரர்களும் இந்திய டெஸ்ட் அணிக்காக ஏற்கனவே விளையாடிவர்கள். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மே மாதம் (முதல் அல்லது 2வது வாரம்) அறிவிக்கப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


