எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை கண்காணிப்பதில் எந்த தவறுமே இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியது தொடர்பான புகார் மனுக்களை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதில் என்ன தவறு உள்ளது? அதில் எந்த தவறுமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனிநபர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால் அப்போது இந்த புகாரை பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஷ்யாம் திவான், தினேஷ் திவேதி ஆகியோர், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஆர்வி ரவீந்திரன் தலைமையிலான பெகாசஸ் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தினர். ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், தேசப்பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தால் அதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்று கோரிக்கையை நிராகரித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


