எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிட்டப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளம் அமைக்கப்பட உள்ள இந்த சென்னை எல்லை சாலைத் திட்டத்தில், பகுதி-1 மற்றும் 2 பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை எல்லை சாலைத் திட்டம்- பகுதி-3 பணி தொடக்க விழா வியாழக்கிழமை காலை திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடுகண்டிகையில் நடைபெற்றது.
இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை, திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ரூ. 2,689.74 கோடி மதிப்பில் 30.10 கி.மீ., நீளத்துக்கு, சேவை சாலைகளுடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பொதுபணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், எம்.எல்.ஏ.க்களான கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


