எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ''யூடியூப் நிறுவனம் இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. இந்தியாவில் மேலும் ரூ.850 கோடியை முதலீடு செய்யும்'' என யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் தெரிவித்தார்.
மும்பையில் நடந்த 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டில் யூடியூப் சி.இ.ஓ., நீல் மோகன் பேசியதாவது: கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 10 கோடிக்கும் அதிகமான சேனல்கள் வீடியோக்களை அப்லோடு செய்துள்ளன. அவற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. யூடியூப் நிறுவனம், இதுவரை இந்திய வீடியோ பதிவிடுவோருக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது.
வீடியோ பதிவிடுவோர் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் இந்தியாவில் ரூ.850 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு இந்தியாவின் வீடியோ பதிவிடுவோர், அப்லோடு செய்த வீடியோக்களை வெளிநாட்டில் பயனர்கள் 45 பில்லியன் மணி நேரம் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) செலவிட்டு பார்த்துள்ளனர்.
இந்தியாவின் சிறப்பு என்ன என்பதை இந்திய வீடியோ பதிவிடுவோர் எடுத்துரைக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, டிஜிட்டல் துறையில் வளர்ச்சியை உருவாக்கி உள்ளது. யூடியூப்பில் 2.5 கோடி அதிகமான சந்தாதாரர்களுடன், உலகின் எந்த தலைவருக்கு இல்லாத வகையில் பிரதமர் மோடி அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ளார். இவ்வாறு நீல் மோகன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


