எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அமைச்சர் கவாஜா அசிப் அளித்த பேட்டியில், "சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கியாலோ துப்பாக்கியாலோ சுடுவது மட்டுமில்லை; அதற்கு பல முகங்கள் உள்ளன. தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதோ, திசைத் திருப்பி விடுவதோ அதில் ஒன்று. இது தாகம், பட்டினி மரணங்களுக்கு வழிவகுக்கும்.
நாங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதல்ல. சம்பந்தப்பட்டவர்களை பாகிஸ்தான் அணுகும்" என்று தெரிவித்தார். மேலும், இந்தியா தொடர்ந்து தூண்டிவிடும் வேலையைச் செய்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அமைச்சர், ”பாகிஸ்தான் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே எடுக்கும்” என்றார்.
இதனிடையே, காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை மூடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


