Idhayam Matrimony

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2025      இந்தியா
Jail-1

Source: provided

சில்லாங் : இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசம், மியான்மரில் இருந்து பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் குடியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகாலயா எல்லையில் பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு ஹசி மலைப்பகுதி, கிழக்கு கரோ மலைப்பகுதியில் இருந்து வங்காளதேசத்தில் இருந்து 5 பேர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப்படையினர் அந்த 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இதில் 3 பேர் ஏற்கனவே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து குஜராத்தில் உள்ள துணிக்கடையில் டெய்லர்களாக வேலை செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து