எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்னல் சோபியா குரேஷி, "ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு நடுவானிலேயே தடுத்து தாக்குதலை முறியடித்தது. பாகிஸ்தான் நடத்த இருந்த ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தோல்வியடைந்தன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது;-
லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது. பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச்சடங்கு நடந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மக்களை அல்ல. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்.
இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது. இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தான் மீறியது. சிந்து நதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை. கொடூர தாக்குதலுக்கு ஆளான இந்தியாவின் பதிலடிக்கு உலக தலைவர்கள் மதிப்பளித்துள்ளனர்."
இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


