எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : ஜோ பைடனுக்கு புற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கு க்ளீசன் மதிப்பெண் எனப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சாதாரண செல்களுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் செல்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதை 1 முதல் 10 வரை அளவிடும். இதில், ஜோ பைடனின் மதிப்பெண் 9 என்றும், இது அவரது புற்றுநோய் தீவிரமாக இருப்பதைக் குறிக்கிறது என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.
இது நோயின் தீவிரமான வடிவத்தைக் குறிக்கும் அதே வேளையில், புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது. இது பயனுள்ள சிகிச்சைமுறைக்கு அனுமதிக்கிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.” என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜோ பைடன் விரைவில் குணமடைய பல அரசியல் தலைவர்கள் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துள்ளனர். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில்,
"ஜோ பைடனின் மருத்துவ அறிக்கை தொடர்பாக சமீபத்தில் தகவல் அறிந்து நானும் மெலனியாவும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் எங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோ விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


