எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 2 வருடங்கள் ஆகிறது. 5 முக்கிய வாக்குறுதியை நாங்கள் கொடுத்தோம். பா.ஜ.க.வும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர். ஆனால் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2000, ஒரு கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 4 கோடி பேருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் நிறைய சமூக மக்கள் சொந்த நிலம் இருந்தும் அதற்கான பத்திர உரிமம் இல்லாமல் இருப்பதாய் நான் அறிந்தேன். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசினேன். இன்று கர்நாடக அரசு 1 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் நிலத்துக்கான உரிமத்தை வழங்க உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இது நடந்து முடியும். மேலும், கர்நாடகாவில் 2000 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் எல்லோருக்கும் அவரவர் நிலத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


