எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் சாய ஆலையில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க சாய ஆலை நிறுவனம் ஒப்பதல் அளித்துள்ளது. வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான சாய ஆலையில் உள்ள சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய திருப்பூர் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 31), வேணுகோபால் (30) மற்றும் முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகிய 5 பேர் சென்றனர். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொட்டிக்குள் இறங்கியபோது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர். இதில் சரவணன், வேணுகோபால் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மயக்க நிலையில் இருந்த முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


