எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பா.ஜ.க. தலைமையிலான டெல்லி அரசு, ஆண்டுதோறும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியது. அதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த சூழலில், டெல்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்ட சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அரசாணையில் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி என ரூ.350 கோடியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 4 கோடி வழங்கப்பட்டது, இது 2023-24ல் ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


