எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : ''நான் அரசாங்கத்திற்காக வேலை செய்யவில்லை' என பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு விவரிக்கும் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அதில் ஒரு குழுவிற்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமை வகிக்கிறார். அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது அனைத்துக் கட்சிக் குழுவுடன் சென்றுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், சசி தரூர் பேசியதாவது: நான் அரசாங்கத்திற்காக வேலை செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன். புத்திசாலித்தனமாகத் தாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி, ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.
இந்தியா அதைத்தான் செய்தது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் மக்களைப் பிரிப்பதே நோக்கமாக இருந்தாலும், அது இந்தியாவில் மதம் அல்லது வேறு எந்தப் பிரிவினையையும் பொருட்படுத்தாமல் மக்களை ஒன்றிணைத்தது.
ஒரு தீய நோக்கம் இருந்தது என்பது மிகவும் தெளிவாகிறது. துரதிர்ஷ்டவசமாக, அது எங்கிருந்து வந்தது என்பதில் இந்தியா சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை. பயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, அதற்குப் பதில் சொல்லும். மாறாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே, அந்தச் செயலை நிறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


