எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட 5 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 20 மாநில முதல்வர்கள் மற்றும் 18 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதல்வர்களான யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்), நிதிஷ் குமார் (பீகார்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), மற்றும் துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு எடுத்த முடிவுக்கும் பாராட்டு தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


