எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூடலூர், கடந்த 6 நாட்களில் மட்டும் பெரியாறு அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று காலை 124.75 அடியாக உள்ளது.
அணைக்கு நேற்றுமுன்தினம் காலை 7735 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7319 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்தபோதும் தமிழக பகுதிக்கு 100 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3569 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


