எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, , 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? என்பதற்கு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தநிலையில், 'சார்' என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தினாரா? என்பதற்கு விசாரணையின் போது போலீசார் அளித்த ஆதாரங்கள் மூலம் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
ஞானசேகரனிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கிய நேரத்தில், அவர் யாரோ ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு 'சார்' என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த சார் யார்? என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.
ஞானசேகரன் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா? என்பது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில், 'ஞானசேகரன், தன்னிடம் சிக்கிய மாணவியிடம் தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை திசைதிருப்பி மிரட்டவும் 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது' எனக்கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


