முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      இந்தியா
Amit-Shah 3

புதுடெல்லி, தொகுதி மறுவரையறை பணியின்போது தென் மாநிலங்கள் தெரிவித்த கவலைகள் கவனிக்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகள் வருகிற 2027-ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் பா.ஜனதா அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுவரை தாமதப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்,  நிருபர்களிடம் கூறுகையில் தொகுதி மறுவரையறை பணியின் போது தென் மாநிலங்கள் தெரிவித்த கவலைகள் கவனிக்கப்பட்டு, உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் விவாதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து