எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : “பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம். முடிந்துபோனதை பேச வேண்டாம். முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி பேசுவோம். கமல்ஹாசனின் கன்னட சர்ச்சை விவகாரம் குறித்து நான் பதில் கூறுவது நன்றாக இருக்காது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை.” என்றார். மேலும், அன்புமணிக்கு மீண்டும் பா.ம.க. தலைவர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘பேசுவோம்’ என்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


